அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட மக்ரோன் சிலை.. EDF தலைமைச் செயலகத்துக்கு முன்பாக மீட்பு!!

4 ஆனி 2025 புதன் 13:00 | பார்வைகள் : 2286
Grévin அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மெழுகு சிலை, பரிசில் உள்ள EDF தலைமைச் செயலகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டது.
“ரஷ்யாவை வெளிப்படையாக எதிர்க்கும் ஜனாதிபதி மக்ரோன் - ரஷ்யாடன் எரிபொருள் வியாபாரத்தை மேற்கொள்கிறது” என குற்றம் சாட்டிய Greenpeace எனும் தொண்டு நிறுவனம், அதனைக் கண்டிக்கும் விதமாக இந்த மெழுகு சிலையினை திருடியிருந்தது.
இந்நிலையில், பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள பிரெஞ்சு மின்சாரவாரியத்தின் (Électricité de France) தலைமைச் செயலகத்தின் முன்பாக குறித்த சிலையினை குறித்த தொண்டு நிறுவன ஊழியர்கள் வைத்துள்ளனர்.
சிலை எந்தவித சேதங்களும் இல்லாமல் இறப்பான முறையில் இருந்ததாகவும், அதனை காவல்துறையினர் மீட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.