Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவருக்கு தடை விதித்த ட்ரம்ப்

அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவருக்கு தடை விதித்த ட்ரம்ப்

5 ஆனி 2025 வியாழன் 08:08 | பார்வைகள் : 581


பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

டிரம்ப் கையெழுத்திட்ட பிரகடனம், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை பகுதியளவு கட்டுப்படுத்துகிறது.

டிரம்பின் இந்த பிரகடனம் ஜூன் 9-ஆம் திகதி (திங்கள் கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகெய்ல் ஜாக்சன் கூறுகையில், "நமது நாட்டிற்கு வந்து நமக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் ஆபத்தான வெளிநாட்டவர்களிடம் இருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்கான தனது வாக்குறுதியை ஜனாதிபதி டிரம்ப் நிறைவேற்றுகிறார்." என்று கூறினார்.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்