Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

5 ஆனி 2025 வியாழன் 09:08 | பார்வைகள் : 214


இலங்கை தேசிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவிற்கு எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சசித்ர சேனாநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றில் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் போது சசித்ர ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்