Paristamil Navigation Paristamil advert login

12,000 கி.மீ பாயும் அணு ஆயுத ஏவுகணையை உலகத்திற்கு காட்சிப்படுத்தியுள்ள சீனா

 12,000 கி.மீ பாயும் அணு ஆயுத ஏவுகணையை உலகத்திற்கு காட்சிப்படுத்தியுள்ள  சீனா

6 ஆனி 2025 வெள்ளி 07:42 | பார்வைகள் : 773


சீனா தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையை உலகத்திற்கு காட்சிப்படுத்தியுள்ளது.

சீனா குறித்த அமெரிக்காவின் சமீபத்திய குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலே, சீனா இந்த ஏவுகணையை காட்சிப்படுத்தியதாக ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்வு ஒன்றில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், தைவானை ஆக்கிரமிக்க தயாராகி வரும் சீனா, அதற்காக தைவானுக்கு அருகே உள்ள தீவுகளில் ராணுவ தளவாடங்களை குவித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், சீனாவிற்கு பதிலடி கொடுக்க, ஆசியாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் தயாராக வேண்டும் என தெரிவித்திருந்தார்.

DF-5B எனப்படும் இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை(ICBM), 12,000 கி.மீ தூரம் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க வல்லது.

இதன் மூலம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இலக்குகளை கூட துல்லியமாக தாக்க முடியும் என கூறப்படுகிறது.

இந்த ஏவுகணையானது, 32.6 மீட்டர் நீளமும், 3.35 மீட்டர் விட்டமும், 183 டன் ஏவுதள எடையும் கொண்டது.

மேலும், ஐப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டை விட, இந்த ஏவுகணை 200 மடங்கு சக்திவாய்ந்தது என கூறப்படுகிறது.

சீனாவிடம் 600க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், 2030க்குள் இந்த எண்ணிக்கையை 1,000 த்திற்கு மேலாக அதிகரிக்க முடியும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

தைவான் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வரும் நிலையில், தைவான் தனி நாடு என கூறி, தைவானை மையமாக வைத்து சீனாவுடன் மோத அமெரிக்கா தயாராகி வருகிறது.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்