40% சதவீத விமான சேவைகள் பாதிப்பு!!

2 ஆடி 2025 புதன் 20:06 | பார்வைகள் : 739
நாளை ஜூலை 3, வியாழக்கிழமை விமான கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், 40% சதவீத விமானங்கள் பாதிக்கப்பட உள்ளன.
சாள்-து-கோல் மற்றும் ஓர்லி விமான நிலையங்களில் 25% சதவீத பாதிப்பும், நீஸ் (nice) விமான நிலையத்தில் 50% சதவீத பாதிப்பும் ஏற்பட உள்ளது. அத்தோடு Lyon, Marseille, Montpellier, Ajaccio, Bastia, Calvi மற்றும் Figari விமான நிலையங்களில் 30% சதவீத சேவைகள் இயக்கப்படமாட்டாது.
இந்த அறிவித்தலை Direction générale de l'Aviation civile இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.பயணிகள் விமான நிலையத்தை தொடர்புகொண்டு விசாரித்து விட்டு, விமான பயணங்களை பிற்போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே வேளை, மறுநாள் வெள்ளிக்கிழமையும் விமான சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.