கனேடிய தங்கச் சுரங்கத்தில் 117 மில்லியன் டொலர் தங்கம் பறிமுதல் - மாலி அரசு அதிரடி

12 ஆடி 2025 சனி 06:33 | பார்வைகள் : 296
மாலியில் உள்ள கனேடிய நிருவத்திற்குச் சொந்தமான தங்கச் சுரங்கத்தில் திடீரென அந்நாட்டு அரசாங்க ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி, 117 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றிச் சென்றுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாட்டான மாலியில், கனடாவைச் சேர்ந்த Barrick Gold Corporation நிறுவனம் இயக்கும் Loulo-Gounkoto தங்க சுரங்கத்தில், மாலி அரசு ஹெலிகாப்டர்களில் திடீரென இறங்கி, 1 மெட்ரிக் டன் தங்கத்தை பறிமுதல் செய்தது.
இதன் மதிப்பு சுமார் 117.2 மில்லியன் அமெரிக்க டொலர் எனக் கூறப்படுகிறது.
Barrick நிறுவனம் தெரிவித்ததுபடி, இந்த ஹெலிகாப்டர்கள் "முன்னறிவிப்பு இன்றி" வந்ததாகவும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் அரசின் தற்காலிக நிர்வாகம் மூலம் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தது.
இதற்கிடையில், மாலி அரசு கடந்த ஜனவரியிலும் மூன்று மெட்ரிக் டன் (3000 கிலோகிராம்) தங்கத்தை எடுத்துள்ளதாகவும் Barrick கூறியுள்ளது.
மாலி அரசு கடந்த மாதம், வழக்குகளுக்குப் பிறகு தற்காலிக நிர்வாகத்தைக் கொண்டு தங்க சுரங்கத்தை மீண்டும் இயக்கத் திட்டமிட்டது.
ஆனால் Barrick நிறுவனத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் 2023-ல் தொடங்கியதாகவும், பின்வாங்கப்பட்ட வரிகள் மற்றும் புதிய சுரங்கச் சட்டங்கள் மூலம் அரசுக்கு அதிக பங்கு வேண்டியதாயிற்று எனவும் தகவல்கள் கூறுகின்றன.
Barrick நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் பிரிஸ்டோவ், “நாங்கள் இந்த பிரச்சனையை சர்வதேச சட்ட வழிகள் மூலம் தீர்க்கும் நோக்கத்தில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். Arbitration வழக்கின் முதல் விசாரணை ஜூலை மாத இறுதியில் நடைபெற உள்ளது.