Paristamil Navigation Paristamil advert login

பல்வேறு மாவட்டங்களில் ஜூலை 14 கொண்டாட்டங்களுக்கு தடை!!

பல்வேறு மாவட்டங்களில் ஜூலை 14  கொண்டாட்டங்களுக்கு தடை!!

12 ஆடி 2025 சனி 07:00 | பார்வைகள் : 815


 

பிரான்சின் பல்வேறு மாவட்டங்களில் ஜூலை 14, கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..

காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு, ஜூலை 14 தேசிய நாளின் போது வானவேடிக்கைகள், பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Deux-Sèvres, Sarthe, Dordogne , Creuse, Vienne, Vendée மற்றும் Loire-Atlantique போன்ற மாவட்டங்களுக்கு இந்த தடை விதிக்கப்படுகிறது.

தலைநகர் பரிசில் அவ்வாறான ஆபத்துக்கள் எதுவும் இல்லை என்றபோதும், சுற்றுச்சூழல் மாசடைவைக் கருத்தில் கொண்டு ட்ரோன்கள் மூலம் வானவேடிக்கை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,000 ட்ரோன்களைக் கொண்டு ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்