Paristamil Navigation Paristamil advert login

தேசிய நாள் நிகழ்வுகளுக்காக - உச்சக்கட்ட பாதுகாப்பு !!

தேசிய நாள் நிகழ்வுகளுக்காக - உச்சக்கட்ட பாதுகாப்பு !!

14 ஆடி 2025 திங்கள் 08:20 | பார்வைகள் : 676


இன்னும் சொற்ப நேரத்தில் சோம்ஸ்-எலிசேயில் தேசிய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன. இதற்காக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

காலை 6 மணியில் இருந்து மாலை 3 மணி வரை இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Place de la Concorde பகுதியில் இருந்து Rue de Castiglione வீதியில் இருந்து Boulevarad Malesherbes - Rue de Penthievre - Rue de Ponthieu - Aveneu des Champs-Elysees - Place Charles de-Gulle - Rue Francois வரை உள்ள சுற்றுப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்தோடு அப்பகுதியை சூழ உள்ள பல மெற்றோ நிலையங்களும், சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

காவல்துறையினர், ஜொந்தாமினர், இராணுவத்தினர், அதிரடிப்படையினர் என மொத்தமாக 12,000 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்