Paristamil Navigation Paristamil advert login

ஒரே இரவில் 136 அகதிகள் கடலில் இருந்து மீட்பு!!

ஒரே இரவில் 136 அகதிகள் கடலில் இருந்து மீட்பு!!

22 ஆனி 2025 ஞாயிறு 18:09 | பார்வைகள் : 437


 

பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணம் மேற்கொண்ட 136 அகதிகள் ஒரே இரவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை - சனிக்கிழமைக்கு உட்பட்ட இரவில் மூன்று படகுகளில் பயணித்த குறித்த அகதிகள், இயந்திரக்கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தனர். பின்னர் கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மீட்கப்பட்டனர்.

முதலில் Dunkerque நகர கடற்கரை வழியாக இரண்டு படகுகளில் 115 அகதிகள் பயணித்துள்ளனர். பின்னர் Wissant (Pas-de-Calais) நகர கடற்கரை வழியாக ஒரு படகில் 21 பேரும் பயணித்த நிலையில் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்