Paristamil Navigation Paristamil advert login

விண்வெளி போருக்கு தயாராகும் நான்கு நாடுகள் - செயற்கைக் கோள்களை வீழ்த்தும் சக்தி

விண்வெளி போருக்கு தயாராகும் நான்கு நாடுகள் - செயற்கைக் கோள்களை வீழ்த்தும் சக்தி

23 ஆனி 2025 திங்கள் 10:59 | பார்வைகள் : 117


விண்வெளியும் எதிர்கால போர்களுக்கான புதிய போர் மேடையாக மாறியுள்ளது.

உலகின் சில முக்கிய நாடுகள், எதிரிகள் பரப்பிய செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய விண்வெளி போர் (Space Warfare) தொழில்நுட்பங்களை தற்போது ஏற்கனவே உருவாக்கியுள்ளன.

1985ல் F-15 யுத்த விமானத்திலிருந்து ஏவுகணையை செலுத்தி தனது சொந்த செயற்கைக்கோளை அழித்து விண்வெளி போர் திறனைக் காண்பித்த முதல் நாடு அமெரிக்கா.

இன்று, அதிக எண்ணிக்கையிலான GPS, கண்காணிப்பு மற்றும் உளவு செயற்கைக்கோள்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ரஷ்யா

சோவியத் யுகத்திலிருந்தே விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கும் ரஷ்யா, 2007-க்குப் பிறகு பல்வேறு ரகசிய ASAT (Anti-Satellite) ஆயுத சோதனைகள் செய்துள்ளது.

2021-ல் செயற்கைக்கோளை வெடிக்கச் செய்தது சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனா
2007-ல் தனது பழைய வானிலை செயற்கைக்கோளை வெடிகுண்டு ஏவுகணையால் அழித்து, விண்வெளி சக்தியாக உலகம் அறிந்தது.

தற்போதும் சீனா தொடர்ந்து படைகள் சார்ந்த செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது.

இந்தியா
2019-ல் மிஷன் ஷக்தி திட்டத்தின் கீழ் தனது செயற்கைக்கோளைக் குறி வைத்து வெற்றிகரமாக அழித்து, விண்வெளி பாதுகாப்பு துறையில் இந்தியா வலிமையான இடத்தை பிடித்தது.

விண்வெளி போர் என்பது அறிவியல் கற்பனை அல்ல, உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் உண்மை திட்டமாக மாறியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்