Paristamil Navigation Paristamil advert login

துப்பாக்கிச்சூட்டில் முடிந்த திருமணம்! - மணப்பெண் பலி!!

துப்பாக்கிச்சூட்டில் முடிந்த திருமணம்! - மணப்பெண் பலி!!

23 ஆனி 2025 திங்கள் 11:22 | பார்வைகள் : 1025


 

திருமணம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மணப்பெண் கொல்லப்பட்டுள்ளார்.

பிரான்சின் தென் கிழக்கில் உள்ள சிறிய கிராமமான Goult (Alpes-Côte-d'Azur - மாகாணம்) இல் இச்சம்பவம் நேற்று ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.  முகக்கவசம் அணிந்து திருமண மண்டபத்துக்குள் நுழைந்த ஆயுததாரி ஒருவர், மணப்பெண்ணை இலக்கு வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் 27 வயதுடைய மணப்பெண் அவர் கொல்லப்பட்டதுடன், 13 வயதுடைய சிறுமி ஒருவரும் காயமடைந்துள்ளார். ஆயுததாரி தப்பி ஓடியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்