
23 ஆனி 2025 திங்கள் 13:06 | பார்வைகள் : 493
மிகவும் ஆபத்தான கடற்பயணம - மான்ச் கடல்களில் மேலும் 136 அகதிகள் மீட்பு – குடிவரவு நெருக்கடி!
கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை தினங்களில், 136 அகதிகள் பிரான்சில் இருந்து மான்ச் ((La Manche) கடலின் வழியாக பிரித்தாபனியாவிற்குச் செல்ல முயற்சிக்கையில் கடலில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டதாக கடல் சார் மாவட்ட ஆணையகம் ((Préfecture maritime de la Manche et de la mer du Nord) ) அறிவித்துள்ளது.
இரண்டு படகுகள் கடலில் சிக்கின!
ஒரு படகு Dunkerque பகுதியில் இருந்து புறப்பட்டதும், அதில் இயந்திரம் கடலிற்குள் பழுதடைந்தது.
அதே நேரத்தில், படகு கடலில் உடைந்தால், 38 பேர் நீரில் விழ, அவர்களை கடற்படை மீட்பு கப்பல்கள் மீட்டன.
மற்றொரு படகு, Wissant விரிகுடாவில் இருந்து புறப்பட்டது.
மிக மோசமான நிலையிலிருந்த இந்த படகும் கடலில் உடைந்து விட்டது.
77 பேர், Abeille Normandie என்ற மீட்பு மற்றும் இழுத்துச் செல்லும் கப்பலால் மீட்கப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை மட்டும் 21 பேர் மீட்கப்பட்டனர்.
இவர்கள் பயன்படுத்தியவை, பொதுவாக “small boats” என அழைக்கப்படும்,
மிகவும் சிறிய, பராமரிக்கப்படாத மற்றும் அவிற்கு அதிகமானோர் ஏற்றப்பட்ட படகுகளாகும்.
பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி:
2025 ஆம் ஆண்டில் இதுவரை 18,000 பேர் கடலை கடந்துள்ளனர்
வெள்ளிக்கிழமை: 437 பேர், 7 படகுகளிலும்
சனிக்கிழமை: 583 பேர், 8 படகுகளிலும்
என சராசரியாக ஒரு படகில் 68 பேர் கடலைக் கடந்துள்ளனர்.
இதனால் பிரான்ஸ் - பிரித்தானியா குடிவரவுத் துறையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வானிலை சாதகமாக இருந்ததால், ஜூன் 11 முதல், 10 நாட்களில் மட்டும் 3,500 பேர் கடல் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச கடல் சட்டத்தின் படி, கடலில் உள்ள படகுகள் தாங்கள் உதவி வேண்டுமென்றே தெரிவித்தால்தான் பிரான்சு உதவ முடியும்.
ஆனால், லண்டனின் அழுத்தத்தால், பிரான்சு மாற்றங்களை பரிசீலிக்கிறது
கடற்கரைக்கு 300 மீட்டர் அருகிலுள்ள “taxi-boats” (படகுகளில் நேரடியாக அகதிகளை ஏற்றும் படகுகள்) மீது இணைய நடவடிக்கைகள் எடுக்க புதிய விதிகளை பரிசீலிக்கிறது.
பல்வேறு நாடுகளில் நிலவும்:
போர் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகள்
வறுமை, வேலைவாய்ப்பு பற்றாக்குறை
பிரித்hனியாவில் புதிய வாழ்க்கையை எதிர்பார்க்கும் ஆசை
இவை எல்லாம் இந்த அபாயகரமான கடற்பயணங்களுக்குப் பின்புலமாக உள்ளன.
அதிகப்படியான பயணிகள் மற்றும் வலுவற்ற படகுகள் காரணமாக, இந்த பயணங்கள் பெரும்பாலும் மரணத்துடன் முடிகின்றன.