ஈரான்-இஸ்ரேல்: எமானுவல் மக்ரோன் - புதன்கிழமை பாராளுமன்ற விவாதம்!

23 ஆனி 2025 திங்கள் 15:08 | பார்வைகள் : 507
ஜூன் 25 அன்று இரவு 9:30 மணிக்கு, ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையேயான போரில் பங்கேற்பது தொடர்பான விவாதம் நடைபெறும் என்று பிரதமர் அலுவலகமான Matignon தகவல் தெரிவித்துள்ளது.
இந்த விவாதம் குடியரசுத் தலைவர் எமானுல் மக்ரோனின் விருப்பத்தின் பேரில் நடத்தப்படுகிறது.
பிரதமர் பிரோன்சுவா பய்ரூ, விவாதத்திற்கு முன்னதாக ஒரு அதிகாரப்பூர்வ உரையை நிகழ்த்தவுள்ளார்.
இது பாராளுமன்றக் குழுக்களிடையே விவாதத்தை ஆரம்பிக்க வழிவகுக்கும், ஆனால் வாக்கெடுப்பு இல்லாது இந்த விவாதம் நடைபெறும்.
இது யாப்பு 50-1 (Article) இன் கீழ் நடைபெறும். அரசு, நாடாளுமன்றம் அல்லது செனட்டில், தானாகவோ அல்லது ஒரு குழுவின் வேண்டுகோளின் பேரிலோ, ஒரு பொதுவான பிரச்சனையை கொண்டு விவாதம் நடத்த முடியும்.
இந்த விவாதத்தின் பின்னராக, ஈரான், காசா மற்றும் உக்ரைனில் நிலவும் சூழ்நிலைகளைப் பற்றி கட்சி தலைவர்களுடன் ஒரு முக்கியமான சந்திப்பை நடத்தப்போவதாக எமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு 'Saint-Denis' முறையில் அதாவது நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சித் தலைவர்களுடன் நடைபெறும்.
இதற்குமுன், 2023 ஓகஸ்டில், அதே Saint-Denis முறையில் முந்தைய சந்திப்புகள் நடந்துள்ளன, குறிப்பாக ஹமாஸ் தாக்குதலுக்குப் பின், மற்றும் உக்ரைன் போரின் சூழ்நிலையில்.
போர் மோசமான நிலைமையை எட்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவில், அமெரிக்கா ஈரானின் அணு உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. பதிலாக, ஈரான் அமெரிக்காவுக்கு 'கடுமையான விளைவுகள்' வரும் என எச்சரித்துள்ளது.
இஸ்ரேல், தனது 'முன்னறிவிப்பே இல்லாத' தாக்குதல்களை ஈரானின் தலைநகரமான தெஹ்ரானில் நடத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த விவாதம் சர்வதேச சமாதானம் மற்றும் பிரான்சின் நிலை பற்றி கட்சி உறுப்பினர்களிடையே கருத்து பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும்.