Paristamil Navigation Paristamil advert login

எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் ஆட்சியை மாற்ற முடியாது: மக்ரோனின் எதிர்ப்பு!!

எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் ஆட்சியை மாற்ற முடியாது:  மக்ரோனின் எதிர்ப்பு!!

23 ஆனி 2025 திங்கள் 21:53 | பார்வைகள் : 1095


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் குறித்து, பிரான்ஸ் முக்கியமான பங்கு வகிக்கிறது. சமீபத்தில், ஈரானும் அமெரிக்காவும் இடையே நிலவும் பதிலடி தாக்குதல்களில், பிரான்ஸ் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.

பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-நோயல் பரோ, எல்லா தரப்புகளும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஈரான் இந்த மோதலுக்கு முக்கியமான பொறுப்பேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

முக்கியமாக, ஈரானில் சிறைப்பட்டிருக்கும் இரண்டு பிரஞ்சு குடிமக்களான செசில் கோலர் மற்றும் ஜாக் பரிஸ் மீது தாக்குதல் ஏற்பட்டதால் அவர்களின் பாதுகாப்பு குறித்து பிரான்ஸ் மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், "ஒரு நாட்டின் மக்களை மாற்றி அதற்கு தலைவர்களை நாங்கள் நியமிக்க முடியாது” என்று கூறியதானது டொனால்ட் டிரம்ப், “ஈரானில் ஆட்சி மாற்றம்” வேண்டும் என்ற கருத்துக்கு பதிலாக அமைந்துள்ளது. 

பிரான்ஸ் தற்போது உள்நாட்டு குடிமக்களின் பாதுகாப்பையும், சர்வதேச அமைதியையும் முன்னிறுத்தும் வகையில் நடந்து கொண்டுவருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்