Paristamil Navigation Paristamil advert login

எயார் பிரான்ஸ் – வளைகுடா நாடுகளுக்கான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

எயார் பிரான்ஸ் – வளைகுடா நாடுகளுக்கான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

24 ஆனி 2025 செவ்வாய் 01:17 | பார்வைகள் : 427


மத்திய கிழக்கு பகுதியிலுள்ள மோதல்களை தொடர்ந்து, எயார் பிரான்ஸ், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கான விமான சேவையை  ஞாயிறிலிருந்து புதன்கிழமை வரை  இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

மேலும், தெல்-அவிவ் நோக்கிய விமான சேவைத் தடைக்கான காலத்தையும் நீட்டித்துள்ளது.

எந்த விமானங்கள் பாதிக்கப்படுகின்றன?

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாரிஸ் ஷார்ல்ஸ்-தி-கால் விமான நிலையத்திலிருந்து துபாய் மற்றும் ரியாத் நோக்கிய விமானங்கள் புதன்கிழமை வரை வரை இரத்து செய்யப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட சேவைகள்:

துபாய்க்கு ஒரு விமானம் (ஒன்று சென்று - ஒன்று திரும்பும்)
ரியாத்க்கு ஒரு விமானம்
(இவை தினமும் இரண்டு சுற்றுவட்ட விமானங்கள்)

இந்த முடிவு, மத்திய கிழக்கில் நிலவும் அதிகபட்ச அழுத்தங்கள் மற்றும் எதிர்பாராத நிலைமைகளுக்கிடையில், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்