கம்போடிய எல்லையை மூடிய தாய்லாந்து!

25 ஆனி 2025 புதன் 05:12 | பார்வைகள் : 279
பாதுகாப்பு அச்சம் காரணமாக சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும், கம்போடியாவுக்குள் பிரவேசிக்கும் எல்லைப் பாதைகளை தாய்லாந்து இராணுவம் மூடியுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை காரணமாகப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், தாய்லாந்து இராணுவம் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட குறுகிய கால ஆயுத மோதல்களால், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, தாய்லாந்து இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.