ஒட்டுமொத்த பிரான்சையும் சூறையாடிய புயல்! (செய்திகளின் தொகுப்பு!!)

26 ஆனி 2025 வியாழன் 09:22 | பார்வைகள் : 945
தலைநகர் பரிஸ், இல்-து-பிரான்ஸ் மாகாணம் உட்பட நாடு முழுவதும் நேற்று மாலை முதல் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகியிருந்தன. சேத விபரங்களை தொகுத்து தருகிறது இந்த பதிவு.
● 12 மற்றும் 59 வயதுடைய இருவர் பலியாகியுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு போராடி வருகின்றார்.
● நேற்று மாலை குறுகிய நேரத்தில் 40,392 இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகியிருந்தன.
● Nord மற்றும் Pas-de-Calais மாவட்டங்களில் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அங்கு மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. Oise மாவட்டத்திலும் 140 கி.மீ வரை புயல் பதிவாகியிருந்தது.
● இன்று காலை நிலவரப்படி 100,000 மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. Auvergne, Midi-Pyrénées, Centre-Val de Loire, Burgundy மற்றும் Limousin ஆகிய பகுதிகளில் இந்த மின் தடை உள்ளன.
● Occitanie தொடக்கம் Grand-Est வரையான 700 கி.மீ நிலப்பரப்பை புயல் சூறையாடிச் சென்றிருந்தது.