சாலை விபத்து - மூவர் உயிரிழப்பு - ஒருவர் உயிராபத்தில் – போதைப்பொருள் உபயோகம்!

27 ஆனி 2025 வெள்ளி 00:27 | பார்வைகள் : 362
ஜூன் 26, வியாழக்கிழமை அதிகாலை Mandelieu-la-Napoule (Alpes-Maritimes) பகுதியில் A8 நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்திற்குக் காரணமான வாகன ஓட்டுனர் மது மற்றும் கொக்கெயின் பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.
முதல் விசாரணைப் பதிவுகளின் படி, இத்தாலி – பிரான்ஸ் திசையில் வந்த ஒரு வாகன ஓட்டுனர் மைய தடுப்புச் சுவரை (glissière) மீறி எதிர்பக்கம் சென்றுள்ளார்.
அதன்பின், ஒரு வாகனத்தை முடடிச் சென்றார். ஆனால் முன்புறமாக மோதிய இரண்டாவது வாகனத்தில் பயணித்த இரு பெண்கள் – இருவரும் உடனடியாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 20 வயதுடைய வாகனத்தை ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எதிர்பக்கம் மோதிய வாகனத்தில் பயணித்த Ambre (33) மற்றும் Clémence (34) எனும் இரு தாதிகள் சாவடைந்துள்ளனர்.
இவர்கள் Mougins நகரில் உள்ள Arnaud Tzanck தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தனர். இருவரும் மருத்துவத் தாதிகள். அதில் ஒருவர் புதிதாக பேறுகால விடுப்பிலிருந்து பணிக்கு திரும்பி வந்திருந்தார்.

மற்றொரு பயணி, வாகனத்துக்குள் சிக்கிய நிலையில், இரண்டு மணி நேர மீட்பு நடவடிக்கைக்கு பின் மீட்கப்பட்டார். அவர் பல்வேறு உடல் காயங்களுடன், நீசில் உள்ள Pயளவநரச மருத்துவமனைக்கு உலங்குவானூர்தியில் அனுப்பப்பட்டார், தற்போதும் அவரது நிலைமை கவலைக்கிடமானதாகவே உள்ளது.
விபத்து நடந்த இடத்தில், விபத்தின் தீவிரத்தால் சில வாகனப்பாகங்கள் பத்து, இருபது மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரின் ரத்த பரிசோதனையில் 0.74g/L அளவு மதுபானம் மற்றும் கொக்கெயின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிரிப்பு வாயு (protoxyde d’azote) கொண்ட ஒரு சிலிண்டர் அந்த இடத்தில் காணப்பட்டாலும், அது யார் உடையது என்பது இன்னும் தெரியவில்லை.
பெரும் மீட்பு நடவடிக்கையில் 23 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 10 வாகனங்கள் ஈடுபட்டன.
A8 வீதி இரு பக்கத்திலும் மூடப்பட்டது; இதனால் 20 கி.மீ. வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதியத்திற்கு பின்னர் மட்டுமே மீண்டும் இயல்பு நிலை ஏற்பட்டது.
Grasse நகரில் உள்ள நீதிமன்றம் இது தொடர்பாக வழக்கை தொடங்கியுள்ளது, விசாரணையை Mandelieu-la-Napoule peloton motorisé எனும் இயந்திரப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.