Paristamil Navigation Paristamil advert login

39°C வரை வெப்பம்! - 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

39°C வரை வெப்பம்! - 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

27 ஆனி 2025 வெள்ளி 08:30 | பார்வைகள் : 789


 

இன்று ஜூன் 27, வெள்ளிக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 39°C வெப்பம் பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Aude, Drôme, Haute Corse, Isère, Rhône, Var மற்றும் Vaucluse ஆகிய 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாளை ஜூன் 28 மற்றும் மறுநாள் 29 ஆம் திகதிகளில் அதிகூடிய வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 42°C வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்