Paristamil Navigation Paristamil advert login

ஐதராபாத் கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்து 10 பேர் பலி; 20 பேர் காயம்

ஐதராபாத் கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்து 10 பேர் பலி; 20 பேர் காயம்

30 ஆனி 2025 திங்கள் 13:15 | பார்வைகள் : 158


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 10 பேர் தீக்கிரையாகினர். 20 பேர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் தீயணைக்கும் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டன்செருவில் உள்ள பாசமிலராமில் உள்ள சீகாச்சி கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

அணு உலை வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மிக பலத்த வெடிப்பு காரணமாக சுற்றியுள்ள கட்டிடங்கள் குலுங்கின, தொழிற்சாலையின் சில பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த வெடிப்பில் பலர் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்