Paristamil Navigation Paristamil advert login

பெண்களின் தலைமுடி பிரச்னைக்கு அருமருந்தாகும் செம்பருத்தி பூ...

பெண்களின் தலைமுடி பிரச்னைக்கு அருமருந்தாகும் செம்பருத்தி பூ...

26 ஆடி 2022 செவ்வாய் 04:32 | பார்வைகள் : 10133


 நம் தலைமுடியின் நீளம் நம் அழகை அதிகரிப்பதோடு, நம் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். நம் உடலின் ஒட்டுமொத்த தோற்றத்தில் முடி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு அழகான, நீளமான மற்றும் ஆரோக்கியமான முடி இருந்தால், நீங்கள் எந்த வகையான ஹேர் ஸ்டைல்லையும் ட்ரை செய்யலாம். ஆனால், உங்கள் தலைமுடி வறண்டு, முடி உதிர்வு அதிகமாக காணப்படுதல் போன்ற பல பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் என்ன ஹேர் ஸ்டைலையும் ட்ரை செய்தாலும் அவை மோசமான தோற்றத்தையே ஏற்படுத்தும். மேலும் பொடுகு தொல்லை இருந்தால், உடைகளின் மேல் காணப்படும் துகள்களை பற்றியே நாம் அதிகம் நினைத்துக் கொண்டிருப்போம்.

 
நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது இதற்காக நேரம் ஒதுக்குவது என்பது கடினம். சலூனைப் பார்வையிடவும், முடி பராமரிப்பு சிகிச்சைகளை மேற்க்கொள்ளவும் நம்மால் முடிவதில்லை. எனவே, இந்த பிரச்சனையை தீர்க்க, உங்கள் தலைமுடி வளர்ச்சியில் அதிசயங்களை நிகழ்த்த ஒரு சுவாரஸ்யமான வீட்டு வைத்தியம் இதோ.
 
செம்பருத்தி செடியை பற்றி தான் நாம் தற்போது பார்க்கப்போகிறோம். ஆயுர்வேதத்தில் நம் கூந்தலுக்கு செம்பருத்தி செடியின் பூவும் அதன் இலைகளும் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இவை உங்கள் தலைமுடி உதிர்வதை தடுப்பதோடு, உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. அது மட்டுமல்லாமல், பல்வேறு முடி பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இந்த செடி உதவுகிறது.
 
செம்பருத்தி பூக்களில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு தலைமுடியின் வேர்களுக்கு புத்துயிர் அளிக்கிறது. செம்பருத்தி பூவின் சாற்றை தலையில் தேய்த்து வருவதன் மூலம் உங்கள் வறண்ட கூந்தலை மென்மையாக கூந்தலாக மாற்றுகிறது.
 
பொடுகு வராமல் தடுக்க : நாம் டூவீலரில் செல்லும்போது தூசிகளாலும், இடத்திற்கு தகுந்தபடி மாறும் நீர் காரணமாகவும், பலர் பொடுகு பிரச்சனைகளால்அவதிபடுகின்றனர். இது தலையில் அரிப்பை உண்டாக்குவதோடு, முடியில் வறட்சி நிலையை ஏற்படுத்தி முடி உதிர்வை அதிகப்படுத்தும். இந்நிலையில், செம்பருத்தி பூவிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தலையில் தேய்ப்பதால் பொடுகு பிரச்சனைகள் நீங்கும்.
 
நரை முடியை தடுக்க : தற்போதுள்ள காலத்தில் இளவயதில் நரைமுடி என்பது சாதாரணமான விஷயமாக உள்ளது. செம்பருத்தி பூக்களில் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்கள், வைட்டமின்கள் மற்றும் மெலனின் நிறைந்துள்ளதால், உங்கள் தலைமுடியை கருப்பாக வைத்திருக்கவும், வெள்ளை முடி வருவதை தடுக்கவும் உதவுகிறது.

முடி உதிர்வை எதிர்த்துப் போராடுகிறது : ஆண், பெண் இருவருக்கும் தலைமுடி பிரச்சனைகள் என்பது பொதுவானதாக இருக்கும் நிலையில் இந்த செம்பருத்தி ஒரு நல்ல தீர்வாக அமையும் என்றே சொல்லலாம். பொதுவாக அனைத்து வயதினரிடமும் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை பிரச்சனைகள் அதிகரித்து வருவது எல்லோரும் அறிந்ததே, இதற்கு செம்பருத்தி பூ மற்றும் இலைகளால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க் நிச்சயம் பயனளிக்கும். எனவே வாரம் ஒரு முறை இதனை முயற்சி செய்து பாருங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்