Seine-Saint-Denis : தம்பதியினர் கைது!!

2 ஆவணி 2025 சனி 20:12 | பார்வைகள் : 2204
Seine-Saint-Denis நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தாதியாக பணிபுரியும் பெண் ஒருவரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Montreuil மருத்துவமனையில் பணிபுரியும் குறித்த பெண் தாதி, நோயாளிகளின் அந்தரங்களை படம் பிடித்ததாகவும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளை ஆரம்பித்த 93 ஆம் மாவட்ட காவல்துறையினர் குறித்த தாதி மற்றும் அவருடைய கணவர் இருவரையும் கைது செய்தனர்.
விரைவில் அவர்ககுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.