கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய கடற்கரையில் நிலநடுக்கம்

4 ஆவணி 2025 திங்கள் 10:41 | பார்வைகள் : 177
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய கடற்கரையின் ஹைடா குவைக்கு மேற்கே 4.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:20 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஏற்பட்டது எனவும் இது 15 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது எனவும் கனடிய பூமியதிர்வு கண்காணிப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும், 4.0 ரிக்டர் அளவில் இதுபோன்ற சேதங்கள் எதிர்பார்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், செவ்வாய்க்கிழமை ரஷ்ய கடற்கரையில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை அடுத்து, பசிபிக் பெருங்கடலில் அலைகள் பரவியதால் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பின்னர் அந்த எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது.
ஆனால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் அவசரகால மேலாண்மை அமைச்சர், இந்த சம்பவம் உள்ளூரில் ஒரு பெரிய நிலநடுக்கத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025