இலங்கையில் பிறப்பு வீழ்ச்சியால் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

6 ஆவணி 2025 புதன் 11:57 | பார்வைகள் : 147
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 360,000 ஆக இருந்த 1 ஆம் தரத்துக்கான மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 298,000 ஆகக் குறைந்துள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிறப்பில் ஏற்பட்ட குறைவு இதை முக்கியமாகப் பாதித்துள்ளது, மேலும் கணிப்பின்படி, இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 196,209 ஆக இருக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (05) புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன அளித்த பதிலிலேயே மேற்கண்ட விடயம் அம்பலமாகியுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்க பாடசாலைகளில் 1 ஆம் வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை 360,000 ஆக இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கை 298,000 ஆகக் குறைந்துள்ளது, இது ஓர் ஆபத்தான குறைவு என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அடுத்த 05 ஆண்டுகளுக்கான கணிப்பின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இல் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 196,209 ஆக இருக்கலாம், மேலும் இது முக்கியமாக பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவால் ஏற்படுகிறது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன பதிலளித்தார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025