Paristamil Navigation Paristamil advert login

Beauvais விமான நிலையத்தில் வீடியோ அழைப்பு மிக சத்தமாக இருந்ததால் ஏற்பட்ட சண்டையில் இரு பயணிகள் கைது!!

Beauvais விமான நிலையத்தில் வீடியோ அழைப்பு மிக சத்தமாக இருந்ததால் ஏற்பட்ட சண்டையில் இரு பயணிகள் கைது!!

12 ஆவணி 2025 செவ்வாய் 13:58 | பார்வைகள் : 748


2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி, போவே (Beauvais) விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் சத்தமான வீடியோ அழைப்பு காரணமாக சண்டையில் ஈடுபட்டுள்ளனர். 

ஒருவர் ஸ்பீக்கரில் பேசுவதை மற்றொருவர் தாங்களாகவே எதிர்த்து, இருவரும் கைகலப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகராறு அளவுக்கு அதிகமாக மாறியதால், எல்லை காவல் துறையினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போர்ச்சுகல் செல்ல இருந்தாலும், விடுமுறையை விட காவல் நிலைய செல்லில் நேரம் கழிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் எல்லை காவல் துறையினருக்கு சாதாரணம் அல்ல; அவர்கள் பெரும்பாலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் புகையிலை, போதைப்பொருள் கடத்தல்களை தடுக்கச் செயற்படுகின்றனர். 2024-இல் மட்டும், 2 டன் புகையிலை இவ்விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்