Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

15 ஆவணி 2025 வெள்ளி 19:57 | பார்வைகள் : 167


வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில், 15.8.2025மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற MI-17 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், இரு விமானிகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

 

வடக்கு பாகிஸ்தானில் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

மோசமான வானிலை காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்