Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்சில் சீரற்ற வானிலை... ஏழு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

இல்-து-பிரான்சில் சீரற்ற வானிலை... ஏழு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

19 ஆடி 2025 சனி 18:02 | பார்வைகள் : 550


 

சீரற்ற வானிலை காரணமாக இன்று ஜூலை 19, சனிக்கிழமை இல்-து-பிரான்ஸ் உட்பட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் நள்ளிரவு வரை இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு Ardèche, Haute-Loire, Drôme, Rhône, Loire, Isère மற்றும் Ain ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கையான ’செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாளை ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமையும் இல்-து-பிரான்சுக்கு இடி மின்னல் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்