Paristamil Navigation Paristamil advert login

இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான்

இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான்

21 ஆடி 2025 திங்கள் 11:41 | பார்வைகள் : 229


ஈரானின் பாதுகாப்பு திறன்கள் மீண்டும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.

 

கடந்த ஜூன் மாதத்தில், இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலால் ஈரானின் பல ராணுவ தளங்கள் மற்றும் வான்வழி பாதுகாப்பு நிலையங்கள் நாசமானது.

 

ஆனால், வெறும் ஒரே மாதத்தில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளையும் முழுமையாக புதுப்பித்து, மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றியிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

 

Defa Press செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ஈரான் இராணுவத்தின் இயக்கப்பொறுப்பாளர் மஹ்மூத் மூசவி (Mahmoud Mousavi), "சில அமைப்புகள் சேதமடைந்தது உண்மைதான், ஆனால் முன்னமே பாதுகாப்பாக வைத்திருந்த உள்நாட்டு தயாரிப்பு அமைப்புகளை உடனடியாக நிலைநிறுத்தினோம்," என தெரிவித்துள்ளார்.

 

ஈரானில் உருவாக்கப்பட்ட Bavar-373 என்பது நீண்ட தூர எதிரிகள் மீது தாக்கமிடும் சக்திவாய்ந்த ஏவுகணை அமைப்பாகும்.

 

இது 300 கிமீ வரையான வான்வழி தாக்குதல்களை ஒரே நேரத்தில் கண்காணித்து எதிர்கொள்வதற்கும், பல இலக்குகளை துல்லியமாக அழிக்கவும் வல்லது.

 

அதேபோல், ரஷ்யாவிலிருந்து வாங்கியுள்ள S-300 அமைப்பும் தற்போது சிறப்பாக பதிலளிக்கும் நிலையில் உள்ளது.

 

இந்த மொத்த பாதுகாப்பு அமைப்பும் வெளிநாட்டின் உதவியின்றி முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது முக்கிய செய்தியாகும். இது ஈரானின் ராணுவ தன்னிறைவை வெளிப்படுத்துகிறது.

 

இது வெறும் ராணுவ பதிலளிப்பல்ல. இது ஒரு அரசியல் செய்தி. “ஈரானை பலவீனமாக கருதவேண்டாம்,” என்பது அவர்களின் வெளிப்படையான எச்சரிக்கை.

 

உலகின் முன்னணி பாதுகாப்பு நிபுணர்களையே ஆச்சரியப்படவைத்த ஈரானின் இந்த விரைவான பதிலடி, மேற்கத்திய நாடுகளுக்குப் புதிய சவாலாக அமைகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்