விபத்தில் முடிந்த மகிழுந்து பந்தயம் - மூவர் பலி.. பலர் காயம்!!

26 ஆடி 2025 சனி 15:55 | பார்வைகள் : 663
பந்தயம் ஒன்றின் போது, மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி பார்வையாளர் கூட்டத்துக்குள் பாய்ந்ததில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
Puy-de-Dôme மாவட்டத்தில் இன்று ஜூலை 26, சனிக்கிழமை Rallye de la Fourme எனும் மகிழுந்து பந்தயம் இடம்பெற்றது. அதன்போது மகிழுந்து ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி, பார்வையாளர்கள் மீது பாய்ந்தது. இதில் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக்குழுவினர் தேவையான உதவிகளை புரிந்து வருகின்றனர்.
முன்னதாக சென்றவருடம் இடம்பெற்ற பந்தயத்திலும் இதேபோன்ற சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.