பிரதமரிடம் இபிஎஸ் வலியுறுத்திய 3 கோரிக்கைகள்!
27 ஆடி 2025 ஞாயிறு 07:51 | பார்வைகள் : 1714
திருச்சியில் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்தபோது, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
துாத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, நேற்று இரவு, 10:20 மணிக்கு திருச்சி வந்த பிரதமர் மோடியை, இபிஎஸ் சந்தித்து பேசினார். பிரதமரிடம் நலம் விசாரித்த இபிஎஸ், தன் பிரசார பயணம் குறித்து விளக்கினார். அப்போது மோடியிடம், 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
அதன் விபரம் பின்வருமாறு:
* விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும்.
* கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்
மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.


























Bons Plans
Annuaire
Scan