Paristamil Navigation Paristamil advert login

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!

1 புரட்டாசி 2025 திங்கள் 10:38 | பார்வைகள் : 118


இலங்கை அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

ஹராரேயில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 278 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு நிர்ணயித்தது.

 

பின்னர் ஆடிய இலங்கை அணியில் பதும் நிசங்கா (Pathum Nissanka) 122 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

 

 

அணித்தலைவர் சரித் அசலங்கா (Charith Asalanka) பொறுப்பாக, ஆடி 61 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்கள் விளாச, இலங்கை அணி 49.3 ஓவரில் 278 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

சதம் விளாசிய பதும் நிசங்கா ஆட்டநாயகன், தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளையும் பெற்றார்.

 

வெற்றி குறித்து பேசிய அணித்தலைவர் அசலங்கா, "ஜிம்பாப்வேயில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு அணிகளும் சிறப்பாகப் போராடின. அடிப்படைகளை சரியாக செய்யுங்கள். வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

 

நிசங்கா தேவையான 100 ஓட்டங்களை அடித்தார். அது மிகவும் அற்புதம். இளம் வீரர்கள் 'ஏ' அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நான் வீரர்களிடம் குறிப்பாக நிசங்காவிடம், இடைவெளிகளைத் தாண்டி கடுமையாக ஓட்டங்களை எடுக்க சொன்னேன். எங்களுக்கு எல்லா இடங்களிலும் ஆதரவாளர்கள் உள்ளனர்" என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்