Paristamil Navigation Paristamil advert login

குடிமக்கள் அல்லாதவர்களை விரைவாக நாடுகடத்த அவுஸ்திரேலியா அரசு முடிவு

குடிமக்கள் அல்லாதவர்களை விரைவாக நாடுகடத்த  அவுஸ்திரேலியா அரசு முடிவு

3 புரட்டாசி 2025 புதன் 19:24 | பார்வைகள் : 338


அமெரிக்கா, அமெரிக்கக் குடிமக்கள் அல்லாதவர்களை நாடுகடத்த திட்டமிட்டுவருவதுபோல், அவுஸ்திரேலியாவும் குடிமக்கள் அல்லாதவர்களை விரைவாக நாடுகடத்த சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது.

அவுஸ்திரேலியா, அவுஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதவர்களை மூன்றாம் நாடுகளுக்கு நாடுகடத்துவதை எளிதாக்கும் வகையில் நாளை சட்டம் ஒன்றை இயற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றச்செயல்கள் காரணமாக அகதி விசா மறுக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை மறுகுடியமர்த்துவதற்காக, தென் பசிபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள, உலகின் மூன்றாவது சிறிய நாடான Nauru என்னும் நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது அவுஸ்திரேலியா.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அரசின் இந்த முடிவு, ட்ரம்பின் கொள்கைகளை ஒத்திருப்பதாகவும், அவுஸ்திரேலியா, அகதிகளை சிறு தீவு நாடுகளில் கொண்டு கொட்டுவதுபோல் உள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் விமர்சனம் முன்வைத்துள்ளன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்