Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது

இலங்கையில் 83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது

8 புரட்டாசி 2025 திங்கள் 19:18 | பார்வைகள் : 246


வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல, ஹொரகொல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சோதனையைத் தொடர்ந்து, வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் மற்றும் கணேமுல்லையைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஆகிய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கணேமுல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்