நேபாளத்தில் பதற்றம் - இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு
9 புரட்டாசி 2025 செவ்வாய் 18:12 | பார்வைகள் : 993
நேபாளத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு மத்தியில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்ந்து, வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை தூதரக அதிகாரிகளை +977- 9851048653 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் எப்போதும் தண்ணீர் மற்றும் உலர் உணவுகளை அருகிலேயே வைத்துக்கொள்ளுமாறும், மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் எப்போதும் அவற்றை தங்களிடமே வைத்துக்கொள்ளுமாறும் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷாரா ரொட்ரிகோ அறிவுறுத்தியுள்ளார்.
நேபாளத்தின் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், நேபாளத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் பல சமூகத் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் 22 மாணவர்கள் உட்பட 99 இலங்கையர்கள் உள்ளதுடன், அதில் தூதரக ஊழியர்களும் அடங்குவதாகவும் இதுவரை எந்த இலங்கையர்களும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

























Bons Plans
Annuaire
Scan