யேமன் தலைநகர் சனாவில் வான்வழி தாக்குதல் - 9 பேர் பலி

11 புரட்டாசி 2025 வியாழன் 11:02 | பார்வைகள் : 253
யேமன் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஹவுத்தி இயக்கம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சனா மற்றும் அல்-ஜாஃப் மாகாணம் இரண்டிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தலைநகரின் அல்-தஹ்ரிர் பகுதியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதல் தலைமையகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் தலைநகரில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025