இரண்டு விடுமுறை நாட்கள் நீக்கப்படுவது ரத்து: புதிய பிரதமர் அறிவிப்பு!!

13 புரட்டாசி 2025 சனி 19:36 | பார்வைகள் : 539
புதிய பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு, 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் முன்மாதிரியான மாற்றங்களை அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் பரிந்துரைத்திருந்த இரண்டு தேசிய விடுமுறை நாட்களை நீக்கும் திட்டத்தை அவர் ரத்து செய்துவிட்டார்.
மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் வேலைக்கு நியாயமான பாராட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலை என அவர் கூறியுள்ளார். வரி விதிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை சமநிலையாக கையாள முக்கியமான கலந்துரையாடல்கள் தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சமூக கூட்டாளிகள், இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் நேர்மையான உரையாடலுக்கு பிரதமர் தயாராக உள்ளார். நாட்டுக்கு ஒரு வலுவான பட்ஜெட்டை வழங்க இது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நோக்கமாக, அதிகாரப்பகிர்வு, மாநில சுதந்திரம் மற்றும் நிர்வாக தெளிவுபடுத்தலுக்கான பெரிய திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025