Paristamil Navigation Paristamil advert login

போக்குவரத்து, பாடசாலைகள், மருந்தகங்கள்… செப்டம்பர் 18 வேலைநிறுத்தம்!!

போக்குவரத்து, பாடசாலைகள், மருந்தகங்கள்… செப்டம்பர் 18  வேலைநிறுத்தம்!!

15 புரட்டாசி 2025 திங்கள் 12:44 | பார்வைகள் : 467


செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள தேசிய வேலைநிறுத்தம் பல துறைகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து, கல்வி, மருந்தகங்கள், கினேதெரபி மற்றும் ஆற்றல் துறைகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளன. 

ரயில்கள், பஸ்கள், மெட்ரோ, RATP, VTC மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட பல போக்குவரத்து சேவைகள் குறைவாக இயங்கலாம். முக்கிய தொழிற்சங்கங்கள் இந்நாளை "கறுப்பு நாள்" என வர்ணிக்கின்றன. பல பயணிகள் சேவைகள் முன்கூட்டியே முடங்கும் வாய்ப்பு உள்ளது.

கல்வித் துறையில், ஆசிரியர்கள் அரசாங்கத்தின் பட்ஜெட் குறைப்புக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். மருந்தகங்களில் பணிபுரிபவர்கள்  மற்றும் கினேசிதெரபி நிபுணர்கள் சம்பளக் கோரிக்கைகள் மற்றும் தொழில் மதிப்பை பாதுகாக்கப் போராடுகிறார்கள். மருந்தகங்கள் மூடப்படலாம் என்றும், அவசர சேவைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. 

மின்சாரம் மற்றும் வாயுத் துறைகளிலும், ஊதிய உயர்வுக்காக போராட்டம் தொடர்கிறது. இந்த வேலைநிறுத்தம், அரசியல் மாற்றங்களுக்குப் பிந்தும் மக்கள் எதிர்ப்புகள் தொடர்கின்றன என்பதை காட்டுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்