பெங்கொக்கில் சாவோ பிரயா ஆற்றில் மூன்று படகுகளில் தீப்பரவல்

16 புரட்டாசி 2025 செவ்வாய் 07:48 | பார்வைகள் : 101
பெங்கொக் - சாவோ பிரயா ஆற்றில் மூன்று படகுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை 14.9.2025 மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபல சுற்றுலாத் தலமான ஆசியாடிக் தி ரிவர்ஃபிரண்டிற்கு அருகிலுள்ள வாட் ராட்சாசிங்கோன் கப்பலில் நங்கூரமிட்டிருந்த ஒரு பயணிகள் படகில் நேற்று மாலை 6.43 மணிக்கு தீ பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு நிமிடங்களுக்குள் தீப்பிழம்புகள் அருகிலுள்ள இரண்டு கப்பல்களுக்கும் பரவியதாகவும், அந்தப் படகுகளைப் பாதுகாக்கும் கயிறுகள் அறுந்துவிட்டதால், தீயில் எரிந்துகொண்டிருந்த படகுகள் ஆற்றின் நடுவில் விழுந்துள்ளன.
இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025