Paristamil Navigation Paristamil advert login

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து உண்மையா?

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து உண்மையா?

17 புரட்டாசி 2025 புதன் 15:33 | பார்வைகள் : 185


பாலிவுட்டின் பிரபலமான தம்பதிகளான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன், கடந்த சில காலமாக விவாகரத்து செய்திகளால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். இருவரும் இதுகுறித்து நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக்குடன் இல்லாமல், தாயுடன் வசிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஐஸ்வர்யா ஏன் தன் தாயுடன் வசிக்கிறார் என்பதை திரைப்பட தயாரிப்பாளர் பிரஹலாத் கக்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் அந்த வீட்டின் மருமகள், இப்போதும் குடும்பத்தை அவர்தான் நடத்துகிறார். இதில் உண்மையில்லை என்று எனக்குத் தெரியும், அவர் ஏன் அபிஷேக்கை பிரிந்து அம்மா வீட்டில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். நான் அவர் வசிக்கும் கட்டிடத்தில்தான் வசிக்கிறேன், அவர் அங்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பது எனக்குத் தெரியும். அவரது தாயின் உடல்நிலை சரியில்லாததால், அவர் தனது தாயின் வீட்டிற்கு வருகிறார்.

ஐஸ்வர்யா தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு, பிறகு அழைத்துச் செல்கிறார். இடையில் கிடைக்கும் நேரத்தில், அவர் தனது தாயைப் பார்க்கச் சென்று, அவருடன் நேரத்தை செலவிட்டு, பின்னர் தனது மகளுடன் வீட்டிற்குத் திரும்புகிறார். அவர் தனது தாயுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார், அவரைப் பற்றி எவ்வளவு கவலைப்படுகிறார் என்பது எனக்குத் தெரியும்.

ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் இருவரும் தங்கள் விவாகரத்து வதந்திகள் குறித்து ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்பதை விளக்கிய பிரஹலாத் கக்கர், 'நீங்கள் கவனித்திருந்தால், அபிஷேக் அல்லது ஐஸ்வர்யா யாரும் இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை. அவர்கள் ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும்? எல்லோரும் பேசட்டும். அவர்கள் எப்போதும் தங்கள் கண்ணியத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள், அதனால்தான் பத்திரிகையாளர்கள் அவர்களை வெறுக்கிறார்கள்' என்றார்.

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் 2007 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். இருப்பினும், கடந்த சில காலமாக அவர்களின் விவாகரத்து வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில், அவர்கள் பற்றி பிரஹலாத் கக்கர் கூறி இருப்பது கவனம் பெற்றுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்