Paristamil Navigation Paristamil advert login

வெப்பம் தொடர்கிறது... 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

வெப்பம் தொடர்கிறது... 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

18 ஆவணி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 496


 

கடந்த வாரம் நிலவிய அதிகூடிய வெப்ப அலை, இந்த புதிய வாரத்திலும் தொடர்கிறது. இன்று ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை நாட்டின் 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்கு மாவட்டங்களில் அதிகூடிய வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக  35°C  வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ariège, Aude, Bouches-du-Rhône, Gard, Haute-Garonne, Hérault, Pyrénées-Orientales, Tarn, Tarn-et-Garonne, Var மற்றும் Vaucluse ஆகிய 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், 16 மாவட்டங்களுக்கு குறைந்த பட்ட மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாலை வேளையில், இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகவும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்