ரொனால்டோ கோல் அடிக்காமலேயே மிரட்டல் வெற்றி! இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அல்-நஸர்

20 ஆவணி 2025 புதன் 09:57 | பார்வைகள் : 115
சவுதி சூப்பர் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் அல்-நஸர் அணி 2-1 என்ற கணக்கில் அல்-இத்திகாத் அணியை வீழ்த்தியது.
ஹாங் காங் மைதானத்தில் நடந்த அரையிறுதிப்போட்டியில் அல்-நஸர் மற்றும் அல்-இத்திகாத் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அல்-நஸர் வீரர் சாடியோ மானே (Sadio Mane) கோல் அடித்தார்.
அடுத்த 6 நிமிடங்களில் அல்-இத்திகாத் வீரர் ஸ்டீவன் பேர்ஃஜ்விஜின் (Steven Bergwijn) பதிலடி கோல் அடித்தார்.
25வது நிமிடத்தில் கோல் அடித்த சாடியோ மானே தவறிழைத்ததற்காக சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
எனினும் 61வது நிமிடத்தில் ஜோவோ ஃபெலிப்ஸ் (Joao Felix) கோல் அடிக்க, அல்-நஸர் (Al-Nassr) அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் அல்-நஸர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி, 23ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் அல்-நஸருடன் மோதும்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1