Paristamil Navigation Paristamil advert login

இடி மின்னல் தாக்குதல்! - 28 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

இடி மின்னல் தாக்குதல்! - 28 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

27 ஆவணி 2025 புதன் 11:07 | பார்வைகள் : 951


 

இடி மின்னல் தாக்குதல் காரணமாக இன்று ஓகஸ்ட் 27, புதன்கிழமை நாட்டின் 28 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடி மின்னல் தாக்குதல்களும், அடை மழையும் பெய்யும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. கிழக்கு மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களான Ain, Allier, Ariège, Aude, Aveyron, Cantal, Côte-d'Or, Doubs, Gard, Haute-Garonne, Gers, Hérault, Jura, Loire, Haute-Loire, Lot, Lozère, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Tarn, Tarn-et-Garonne, Vosges, Haut-Rhin மற்றும் Territoire de Belfort ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகலின் பின்னர் நள்ளிரவு வரையும் 20 தொடக்கம் 40 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் எனவும், 80 தொடக்கம் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்