இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்திய 6 பேரை தூக்கிலிட்ட ஈரான்

5 ஐப்பசி 2025 ஞாயிறு 15:37 | பார்வைகள் : 155
இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்தியதாக கைதான 6 பேரின் மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றியுள்ளது.
இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் 12 நாட்கள் இடம்பெற்ற போரில் குஜெஸ்தான் மாகாணத்தில் உள்ள கோர்ரம்ஷஹர் பகுதியில் குண்டுவெடிப்புகள் நடத்தியதாகவும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை கொன்றதாகவும் 6 பேரை ஈரான் அரசு கைது செய்தது.
இஸ்ரேல் உத்தரவுப்படி இவர்கள் தாக்குதல் நடத்தியதாக இரகசிய விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டு 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் 6 பேரின் மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1