Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்திய 6 பேரை தூக்கிலிட்ட ஈரான்

இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்திய 6 பேரை தூக்கிலிட்ட ஈரான்

5 ஐப்பசி 2025 ஞாயிறு 15:37 | பார்வைகள் : 155


இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்தியதாக கைதான 6 பேரின் மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றியுள்ளது.

இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் 12 நாட்கள் இடம்பெற்ற போரில் குஜெஸ்தான் மாகாணத்தில் உள்ள கோர்ரம்ஷஹர் பகுதியில் குண்டுவெடிப்புகள் நடத்தியதாகவும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை கொன்றதாகவும் 6 பேரை ஈரான் அரசு கைது செய்தது.

இஸ்ரேல் உத்தரவுப்படி இவர்கள் தாக்குதல் நடத்தியதாக இரகசிய விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டு 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் 6 பேரின் மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்