Paristamil Navigation Paristamil advert login

சூடானில் துணை இராணுவத்தினர் தாக்குதல் - 53 பேர் உயிரிழப்பு

சூடானில் துணை இராணுவத்தினர் தாக்குதல் - 53 பேர் உயிரிழப்பு

12 ஐப்பசி 2025 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 161


சூடானில் வடக்கு டார்பூர் மாகாணம் அல்-பஷேர் நகரை குறிவைத்து துணை இராணுவப்படையினர் நடத்திய தாக்குதலில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஆளும் அரசாங்கத்திற்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டு கிளர்ச்சியாக மாறியது. 

சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் இலட்சக்கணக்கானவர்கள் உயிழந்துள்ளனர்.

இந்நிலையில் சூடானில் வடக்கு டார்பூர் மாகாணம் அல்-பஷேர் நகரை குறிவைத்து துணை இராணுவப்படையினர் தாக்குதல் நடத்தினர்.

அங்குள்ள முகாமை குறிவைத்து ஏவுகணைகள், வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் 13 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்