Paristamil Navigation Paristamil advert login

Lilas மகப்பேறு மையம் 61 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படுகிறது!!

Lilas மகப்பேறு மையம் 61 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படுகிறது!!

15 ஐப்பசி 2025 புதன் 21:22 | பார்வைகள் : 572


அக்டோபர் 31 அன்று, 61 ஆண்டுகளாக இயங்கி வந்த லிலா மகப்பேறு மையம் தனது கதவுகளை மூடவுள்ளது. இது பெண்களின் உரிமைக்காகப் போராடிய முக்கிய இடமாக இருந்தது. அதன் மூடலையொட்டி, அக்டோபர் 30 அன்று மௌன பேரணி மற்றும் ஒரு கூட்டம் நடைபெறவிருக்கிறது. பழைய மற்றும் தற்போதைய பணியாளர்கள், மகிழ்ச்சியும் நினைவுகளும் நிரம்பிய தங்கள் அனுபவங்களைப் பகிர்வார்கள்.

இந்த முடிவின் பின்னணியில் நிதிநிலை மோசமாகிவிட்டது, மற்றும் உயர் சுகாதார ஆணையத்தால் வழங்கப்படும் சான்றிதழை இழந்துவிட்டது. 75 நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. நீதிமன்றம் மூலமாக நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட உள்ளன; ஊதியங்கள் AGS காப்பீட்டு அமைப்பால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்