Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முரயாமா காலமானார்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முரயாமா காலமானார்

17 ஐப்பசி 2025 வெள்ளி 18:46 | பார்வைகள் : 250


ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முரயாமா 17.10.2025 தனது சொந்த ஊரான ஒய்டாவில் 101 வயதில் காலமானார்.

மார்ச் 3, 1924 அன்று ஒய்டா மாகாணத்தில் பிறந்த முரயாமா, 1993 இல் ஜப்பான் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரானார் மற்றும் ஜூன் 1994 முதல் ஜனவரி 1996 வரை பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.


ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முரயாமா இன்று(17) தனது சொந்த ஊரான ஒய்டாவில் 101 வயதில் காலமானார்.

மார்ச் 3, 1924 அன்று ஒய்டா மாகாணத்தில் பிறந்த முரயாமா, 1993 இல் ஜப்பான் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரானார் மற்றும் ஜூன் 1994 முதல் ஜனவரி 1996 வரை பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.


இந்த அறிக்கையில் ஜப்பான் தவறான தேசியக் கொள்கையைப் பின்பற்றி, போருக்குச் செல்லும் பாதையில் முன்னேறி, அதன் காலனித்துவ ஆட்சி மற்றும் ஆக்கிரமிப்பு மூலம், பல நாடுகளின் மக்களுக்கு, குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு பெரும் சேதத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டிருந்தார்.

முரயாமாவின் அறிக்கை ஆழ்ந்த வருத்தத்தையும், இதயபூர்வமான மன்னிப்பையும் தெரிவித்தது, இதில் அவர் ஜப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்த அறிக்கை சர்வதேச சமூகத்தால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டது. முரயாமா 2000 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று அமைதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்