இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து - நால்வர் மரணம்

25 புரட்டாசி 2025 வியாழன் 08:47 | பார்வைகள் : 650
குருநாகல் - அநுராதபுரம் பிரதான வீதியில், தலாவ, மீரிகம பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
குருணாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேனும் எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேனின் ஓட்டுநர் தூங்கிவிட்டதே விபத்துக்கான காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்து குறித்து தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.