Paristamil Navigation Paristamil advert login

பொபினி மற்றும் பொண்டி பகுதிகளில் துப்பாக்கிச்சூடு: மூவர் காயம்!!

பொபினி மற்றும் பொண்டி பகுதிகளில் துப்பாக்கிச்சூடு: மூவர் காயம்!!

2 கார்த்திகை 2025 ஞாயிறு 15:47 | பார்வைகள் : 1470


சீன்-சென்-டெனிஸ் பகுதியில் ஞாயிறுக்கிழமை அதிகாலை இரண்டு வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். பொபினியில் அதிகாலை 2 மணியளவில் ஒரு ஆண் தலையில் சுடப்பட்டு மிக மோசமான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இது கொலை முயற்சி எனக் கருதி பரிஸ் குற்றப்பிரிவு விசாரணை தொடங்கியுள்ளது.

இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, பொண்டி பகுதியில் இன்னும் இருவர் வயிற்றில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லையென காவல் துறையினர் தெரிவித்துள்ளது. 

இரண்டாவது வழக்கை சீன்-சென்-டெனிஸ் குற்றப்பிரிவினர் விசாரித்து வருகின்றனர். பழிவாங்கல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்