கொழும்பில் துப்பாக்கிச் சூடு - யாழில் மூவர் அதிரடியாக கைது
8 கார்த்திகை 2025 சனி 15:10 | பார்வைகள் : 171
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தனர்.
இந்த சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றின் உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan