Paristamil Navigation Paristamil advert login

ChatGPT-யில் அதிகரிக்கும் கவலைக்குரிய உரையாடல்! பயனர்களுக்கு Open AI எச்சரிக்கை

ChatGPT-யில் அதிகரிக்கும் கவலைக்குரிய உரையாடல்! பயனர்களுக்கு Open AI எச்சரிக்கை

28 ஐப்பசி 2025 செவ்வாய் 13:04 | பார்வைகள் : 136


உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பான உரையாடல்கள் சாட் ஜிபிடி-யில்(ChatGPT) அதிகரித்து இருப்பதாக Open AI நிறுவனம் தெரிவித்துள்ளது.

Open AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்போட்டான ChatGPT-யிடம், உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பான உரையாடலை வாரந்தோறும் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பயனர்கள் நடத்துவதாக அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த சாட்ஜிபிடி பயனர்களில் உயிரை மாய்த்துக் கொள்ளும் திட்டம் அல்லது நோக்கத்தை வெளிப்படுத்தும் பயனர்கள் சுமார் 0.15% பேர் என்று Open AI நிறுவனம் தெரிவித்துள்ளது.


Open AI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேனின் சமீபத்திய மதிப்பிட்டு படி, சாட் ஜிபிடி-யில் வாராந்திரம் சுமார் 800 மில்லியன் பயனர்கள் இருப்பதாகவும், அதன்படி உயிரை மாய்த்துக் கொள்வது குறித்து AI உடன் உரையாடும் மக்களின் எண்ணிக்கை கவலை உரியதாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த சாட்ஜிபிடி பயனர்களில் உயிரை மாய்த்துக் கொள்ளும் திட்டம் அல்லது நோக்கத்தை வெளிப்படுத்தும் பயனர்கள் சுமார் 0.15% பேர் என்று Open AI நிறுவனம் தெரிவித்துள்ளது.


Open AI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேனின் சமீபத்திய மதிப்பிட்டு படி, சாட் ஜிபிடி-யில் வாராந்திரம் சுமார் 800 மில்லியன் பயனர்கள் இருப்பதாகவும், அதன்படி உயிரை மாய்த்துக் கொள்வது குறித்து AI உடன் உரையாடும் மக்களின் எண்ணிக்கை கவலை உரியதாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்